உள்ளூர் செய்திகள்
புனித இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி நடந்தது.

புனித இருதய ஆண்டவர் ஆலய ேதர் பவனி

Published On 2022-05-30 14:28 IST   |   Update On 2022-05-30 14:28:00 IST
திருக்குவளை புனித இருதய ஆண்டவர் ஆலயத்தில் ேதர் பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த களத்திடல்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த திருஇருதயஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெரு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய திருத்தேர் பவனி நடை பெற்றது. இதனை முன்னி ட்டு, மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர த்தில் இருதயஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலியை செய்துவைத்து சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். 

ஆலய வளாகத்தி லிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News