உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டார்.
தூத்துக்குடி,மே.28-
தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 35) இவர் ஓட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிள்ளார்.கோரம்பள்ளம் ராமநாச்சியபுரம் அருகே சாலையில் வரும்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் ராஜா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.