உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை நகராட்சி கூட்டம்

முறைகேடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-05-28 08:26 GMT   |   Update On 2022-05-28 08:26 GMT
மயிலாடுதுறையில் நடந்த நகராட்சி கூட்டத்தில் முறைகேடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய தற்காக தொடரப்பட்ட வழக்கீல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக நகராட்சி நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலுத்த நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுக்க நகரமன்றத்தில் கோரிக்கை வைத்து தி.மு.க. ம.தி.மு.க. கட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மயிலாடுதுறை நகராட்சி நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு செயல் திட்டங்களுக்கும் செலவினங்களுக்கும் ஒப்புதல் கோரப்பட்டது. இதில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் குப்பைகள் கொட்டி மாசுபடுதல் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் தொட ர்பாக விஜயகுமார் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2018ம் ஆண்டு தொடுத்த வழக்கில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக ரூ.9 லட்சம் செலுத்த ஆணையிடப்பட்டது.

9 லட்சம் இழப்பீட்டு தொகை கட்டுவதற்கு நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகரமன்ற உறுப்பினர்கள் நிர்வாக சீர்கேட்டால் சுற்றுசூழல் பாதிப்படைந்ததற்கு அப்போதை அதிகாரிகளும், பாதாளசாக்கடையை பராமரித்த ஒப்பந்தக்கா ரர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் ஒப்புதல் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடை திட்ட பணியை முறையாக பராமரிக்காத வெர்சடைல் நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்த பணி வழங்கி காலநீட்டிப்பு செய்வதற்கு அனுமதியளிக்க எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசன், தி.மு.க.வை சேர்ந்த கல்யாணிரகு ஆகிய இருவர் வெளிடப்பு செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News