உள்ளூர் செய்திகள்
பலியான ஆகாஷ்

பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்த வாலிபர் பலி

Published On 2022-05-27 15:17 IST   |   Update On 2022-05-27 15:17:00 IST
திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்த வாலிபர் பலியானார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஆலத்தம்பாடி ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக பிரிச்சுமூலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு தலைக்கீழாக கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News