உள்ளூர் செய்திகள்
திருவையாறு அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பலியானார்.
திருவையாறு:
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26).
இவர் அரியலூரில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வேலை சம்மந்தமாக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கும்பகோணம் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
திருவையாறு சர்ச் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.