உள்ளூர் செய்திகள்
ஆதார் சிறப்பு முகாம்

தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்

Published On 2022-05-24 12:23 GMT   |   Update On 2022-05-24 12:23 GMT
தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் சித்ரா விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- 

மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் கமுதி, ராஜசிங்கமங்களம், கீழக்கரை, முதுகுளத்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட 29 துணை தபால் நிலையங்க ளிலும் வருகிற 30- ந்தேதி வரையில் ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் புதிதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோா், இலவசமாகவும், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோா் ரூ.50 கட்டணம் செலுத்தியும் பயனடையலாம். 

சிறப்பு முகாம்களில் அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம்.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் இரு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல்களை்  கொடுத்து சேமிப்புத் திட்டத்தில் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News