உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்ற மாணவி மாயம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்
கோவை,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி (வயது 19).
இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நுைழவு தேர்வுக்காக படித்து வந்தார். சம்பவத்தன்று ரகுநாதன் தனது மகளை பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் மாலையில் அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது இந்திரா பிரியதர்ஷினி மாயமாகி இருந்தார். இது குறித்து ரகுநாதன் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
கே.கே. புதூர் என்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அபர்ணா (19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது தந்தையிடம் கல்லூரியில் கட்டணம் கட்டுவதற்காக ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு கல்லூரிக்கு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.