உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Published On 2022-05-24 10:42 GMT   |   Update On 2022-05-24 10:42 GMT
7 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

திருப்பூர்:

வருகிற 25-ந் தேதி நடக்கும், மாவட்ட சதுரங்க போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் சார்பில் தாராபுரம் ரோடு, ஏஞ்சல் என்ஜினீயரிங் கல்லுாரியில், மாவட்ட சதுரங்க போட்டி நாளை 25-ந் தேதி நடத்தப்படுகிறது.

இதில் 7 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 2003 ஜனவரி 1-ந்தேதி முதல் 2015 ஜனவரி 1-ந்தேதி வரை பிறந்தவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 86376 48637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News