உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணையை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

தனியார் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-05-21 15:52 IST   |   Update On 2022-05-21 15:52:00 IST
மயிலாடுதுறை அருகே தனியார் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஈச்சங்குடி கிராமம் கடலியில் வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

 கல்லூரி முதல்வர் பி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெளிநாடுகளைச் சேர்ந்த 9 பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவ -மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

இதில் கல்லூரியின் நிர்வாகி பாலமுருகு, நாகை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணை முதல்வர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் தேவிகா வேந்தன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News