உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மொழையூர் பஞ்சாயத்து, காளிங்கராயர் ஓடையை சேர்ந்தவர் பாலையா மகன் சுரேஷ் (வயது 27). பெயிண்டர். அய்யா பிள்ளை மகன் மணிகண்டன் (26).
மயிலாடுதுறையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது சோழசக்கர நல்லூர் மெயின் ரோடு என்ற இடத்தில் சென்றபோது மயிலாடுதுறை- சென்னை அரசு பேருந்து இவர்கள் மீது மோதியதில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த மயிலாடு துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களை அரசு பெரியார் மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.