உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினர்.
மயிலாடுதுறை கட்சியின் மாவட்ட தலைவர் ஆத்தூர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மஜ்கர்தீன், மயிலாடுதுறை தொகுதி தலைவர் அப்துல் காதர், பூம்புகார் தொகுதி தலைவர் அக்பர்அலி, தொகுதி செயலாளர் நூருல் அமீன், தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட–மைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.