உள்ளூர் செய்திகள்
ஒசூர் மாநகராட்சி பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
ஒசூர் மாநகராட்சி பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜையை பிரகாஷ் எம்.எல்.ஏ- மேயர் சத்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் 15- வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் மதிப்பில் புதிதாக. சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதேபோல், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக_நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டத்தின் கீழ், ரூ. 5.36 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சமையலறைக் கட்டிடத்திற்கு, பிரகாஷ் எம்.எல்.ஏ, மற்றும் மேயர் சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, ஆஞ்சி,பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன்.
மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மற்றும் , சென்னீர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.