உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் மீன்வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-05-17 10:14 GMT   |   Update On 2022-05-17 10:14 GMT
கிருஷ்ணகிரியில் மீன்வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பழைய பேட்டை பக்கிரி மஸ்தான் தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது24). மீன்வியாபாரியான இவர் நேற்று மேல்தெருவில் தனது நண்பர்கள் தனஸ் (22), சுரேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சதீஸ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தனஸ், சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News