உள்ளூர் செய்திகள்
.

மத்திகிரி அருகே பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு

Published On 2022-05-17 15:42 IST   |   Update On 2022-05-17 15:42:00 IST
மத்திகிரி அருகே பூச்சி மருந்து குடித்த தொழிலாளி பலியானார்.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அடுத்துள்ள அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ் (வயது39). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால்  மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். 

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக நாகேஸ் உயிரிழந்தார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News