உள்ளூர் செய்திகள்
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜமீன் மேலூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மொசையன் என்கிற பாலமுருகன் (39), மற்றும் ஆண்டிமடம் பகுதி சாத்தனப் பட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (39).
இவர்கள் இருவரும் மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திலும் செயின் பறிப்பு, கொள்ளை, திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், டிஎஸ்பி கலைகதிரவன் மற்றும் எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா
ஆகியோர் பரிந்துரையின் பேரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.