உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான இந்திரன்.

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2022-05-17 08:57 GMT   |   Update On 2022-05-17 08:57 GMT
செம்பனார்கோயிலில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மயிலாடுதுறை தாலுக்கா நல்லத்துக்குடி கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இந்திரன் (வயது 20), கபிலன் (25) ஒரே வாகனத்தில் சென்றனர். 

அப்போது எதிரே மற்றொரு வாகனத்தில் காளகஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மணியரசன்குமார் (20), ஆறுபாதி புதுத்தெருவை சேர்ந்த முருகேசன் (20) வந்து கொண்டிருந்தனர்.
 
எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்‌கு நேர் மோதி கொண்டது. இதில் 4 பேரும் பலத்த காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இதில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செம்பனா–ர்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News