உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கிழக்கு பகுதி அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஓசூரில்கி ழக்கு பகுதி அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் காரப்பள்ளி அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கட்டத்திற்கு, கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எம். நடராஜன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார்.
மேலும், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், முன்னாள் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன் உள்பட பலர் பேசினார்கள். மேலும் இதில், ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.