உள்ளூர் செய்திகள்
.

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி, பணம் அபேஸ்

Published On 2022-05-16 10:50 GMT   |   Update On 2022-05-16 10:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி, பணம் திருடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அன்வர்த்திகான் பேட்டையை சேர்ந்தவர்நா கோஜனா (வயது 30). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில்வ சித்து வருகிறார்.  

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 29ந் தேதி ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு பல்பொருள்அங்காடி உள்ள பகுதிக்கு தனது காரில் வந்தார். அங்கு காரை நிறுத்தி விட்டு தனது உறவினரை பார்க்க சென்றார். அந்த நேரம் நாகோஜனாவிடம் 5 பேர் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பினார்கள்.

மேலும் அவர் காரில் வைத்திருந்த மடிக்கணினி, நிறுவன ஐ.டி. கார்டு மற்றும்ரூ .9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் எடுத்து சென்றனர். இந்த நிலையில்கா ரில் மடிக்கணினி, ஐ.டி. கார்டு, பணம் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு நாகோஜனா அதிர்ச்சி அடைந்தார். 

அவர் இது குறித்து அட்கோ போலீசில்பு கார் செய்தார். அதன் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News