உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் சாலையில் வந்த 10 அடி நீள பாம்பு
கிருஷ்ணகிரியில் சாலையில் வந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் நேற்று மதியம் 1 மணிக்கு அங்குள்ள மேம்பாலத்தின் கீழ் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல்கொ டுத்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பாம்பை பிடிக்கும் முயற்சில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவ்வழியாக வந்த தீயணைப்பு வீரர் ஒருவர், பாம்பை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதனால் அந்த பகுதியில் ஒரு நேரம் பரபரப்பாக காணப்பட்டது.