உள்ளூர் செய்திகள்
.

தளியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-05-16 16:12 IST   |   Update On 2022-05-16 16:12:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தளியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,

தளியில் மாந்தோப்பு ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் முஜித்கான் தளி போலீசில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News