உள்ளூர் செய்திகள்
விபத்தில் அடிபட்ட கால் சரியாகாததால் தீக்குளித்து முதியவர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விபத்தில் அடிபட்ட கால் சரியாகாததால் தீக்குளித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி பக்கமுள்ளது எர்ரண்டப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 95).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இவரது காலில் அடிபட்டது. அன்று முதல் அவதிப்பட்டு வந்த அவர், மன வேதனையில் கடந்த 13-ந் தேதி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில்சே ர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திம்மராயப்பா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.