உள்ளூர் செய்திகள்
.

தொடர் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-05-16 16:11 IST   |   Update On 2022-05-16 16:11:00 IST
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரையில் வெயில்சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்னிநட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்விடிய, விடிய மழை பெய்தது.

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 741 கன அடியாக அதிகரித்தது. கே.ஆர்.பி.அணையின் கொள்ளளவு 52 அடியாகும். 

நேற்று மாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 48.05 அடியாகும். பொதுவாக அணை நீர்மட்டம் 48 அடியை எட்டினால்வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.தற்போது அணைக்கு நீர்வரத் அதிகமாக உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் எந்தநேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில்தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் வசிக்க கூடிய மக்களுக்கு 2-வது நாளாகநேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும்,தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பாரூர் 73, பெனுகொண்டாபுரம் 55.40, தேன்கனிக்கோட்டை 54, சூளகிரி 40, கிருஷ்ணகிரி  38.80, ஓசூர்37, போச்சம்பள்ளி  30.20, நெடுங்கல் 30, ராயக்கோட்டை27, ஊத்தங்கரை  13, அஞ்செட்டி 8.60, தளி 5 என மொத்தம் 412 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Similar News