உள்ளூர் செய்திகள்
.

விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சி

Published On 2022-05-16 15:36 IST   |   Update On 2022-05-16 15:36:00 IST
போச்சம்பள்ளியில் விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
போச்சம்பள்ளி, 

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளது. 

இதனால் டன் கணக்கில் டேம்போ மூலம் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மலைபோல் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாலிபிளவர் விலை ரூ.10 கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் பயிரிட ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதனால் எதிர்பார்த்த கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் போட்டி போட்டி வாங்கி சென்றனர் என்றார்.

Similar News