உள்ளூர் செய்திகள்
சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செயலாளர் முஸ்தபா, நகர வர்த்த சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், ஜெயின் சங்கம் கியான்சந்த், ரோட்டரி சங்கம் ராஜேந்திரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ஆறுமுகம், பாலாஜி, விழுதுகள் இயக்கம் தலைவர் ஷரவணன், இந்து மக்கள் கட்சி சுவாமிநாஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, நித்தியாதேவி, நாகரத்தினம், ராஜேஷ், திருக்குறள் பண்பாட்டு பேரவையை சேர்ந்த இளங்கோவன், வழக்குரைஞர் சுந்தரய்யா, ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜெகஜெக.சண்முகம், மாற்றுதிறனாளிகள் சங்கம் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது சீர்காழியில் விரைவு ரெயில்கள் நின்று செல்லவில்லை என்றால் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பல்வேறு அனைத்து கட்சியினர், அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.