உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் விவசாயிடம் பணம் திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் விவசாயிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது53). விவசாயியான இவர் நேற்று கே.ஆர்.பி. அணை ஆர்ச் வளைவு பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற மர்ம நபர் ஒருவர் முனுசா மியின் சட்டை பையில் இருந்து ரூ.700 பணத்தை திருடி விட்டு தப்பியோட முயன்றார். இதனை சுதாரித்து கொண்ட முனுசாமி உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அந்த நபரை கே.ஆர்.பி. டேம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (29) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.