உள்ளூர் செய்திகள்
கெலமங்கலம் அருகே பேப்பர் பண்டல் விழுந்து கிரேன் ஆபரேட்டர் சாவு
கெலமங்கலம் அருகே பேப்பர் பண்டல் விழுந்து கிரேன் ஆபரேட்டர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அகேஸ் (வயது20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள அக்கோண்டபள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது பேப்பர் பண்டல் அகேஸ் மீது எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.