உள்ளூர் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரியில் கிரானைட் கல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி ,
கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பர்கூர்- ஜெகதேவி சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு, 12:30 மணியளவில் அந்த வழியாக லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை பார்த்த்தும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதிகாரிகள் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து பர்கூர் போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரி உரிமையாளர் கார்த்திக், டிரைவர் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.