உள்ளூர் செய்திகள்
.

கல்லூரி மாணவி மாயம் வாலிபர் மீது புகார்

Published On 2022-05-15 14:40 IST   |   Update On 2022-05-15 14:40:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது இளம்பெண். கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பர்கூர் அடுத்த ஆம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். 
கடந்த, 12-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இது குறித்து அவரது உறவினர்கள் மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகை சேர்ந்த விக்னேஷ், என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News