உள்ளூர் செய்திகள்
.

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-05-15 14:40 IST   |   Update On 2022-05-15 14:40:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் பொன்னுசாமி (வயது 65). விவசாயி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. 

இதனால் மனமுடைந்த அவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

 இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News