உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவரங்கம் கருத்தரங்கம் மற்றும் பொது அரங்கம் நடைபெற்ற காட்சி.

தமிழ் வழிக்கல்வி இயக்க கருத்தரங்கம்

Published On 2022-05-15 14:12 IST   |   Update On 2022-05-15 14:12:00 IST
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் பாவரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் பாவரங்கம் கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் வழிக்கல்வி இயக்கத்தின் சார்பில் நல்லாசிரியர் வாசு வரவேற்று பேசினார்.

பாவரங்கம் நிகழ்ச்சிக்கு ரெத்தினம் தலைமை வைத்தார். செந்த மிழ் வேந்தன், தெய்வேந்திரன், கந்தசாமி, சிவசுப்பிரமணியன், உதயகுமார், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாவரங்கம்-கருத்தரங்கம் அறிவியல் மொழியால் அகற்று என்ற தலைப்பில், தமிழ்நாடு கல்வி இயக்க பொதுச்செயலாளர் தேனரசன் எடுத்து வைத்தார். முனைவர் சண்முகப்பிரியா, பாவலர் புத்திரசிகாமணி, பாவலர் அறிவொளி கருப்பையா, பரிதி இளம்வழுதி, சீர்த்தி காமராசன், தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே கிடைக்க நாம் என் ன செய்ய வேண்டும் தலைப்பில் நடந்த பொது அரங்கத்தில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் பழனிவேல் வரவேற்புரையாற்றினார். சின்னப்பா தமிழர் தலைமை தாங்கினார். 

தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்விமொழி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வழங்கிடு, உயர்கல்வி வேலை வாய்ப்புக்கு உறுதி செய்திடு என பல்வேறு கோரிக்கைகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு ஓய்வுப்பெற்ற சங்க வட்டாட்சியர் ராஜசேகர், தலைமை ஆசிரியர் தங்கராசு, தாய்த்தமிழ்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ் வழிக்கல்வி இயக்கம் அப்பாசாமி நன்றி கூறினார்.

Similar News