உள்ளூர் செய்திகள்
.

போச்சம்பள்ளி அருகே பட்டதாரி வாலிபர் மாயம்

Published On 2022-05-13 13:44 IST   |   Update On 2022-05-13 13:44:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாயமான பட்டதாரி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுபுலியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் இளம்பரிதி (வயது 32). இவர் எம்.எஸ்சி.பி.எட். வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை .

நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற இளம்பரிதி  அதன்பின்னர் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பரிதியின் தந்தை மூர்த்தி பாருர்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News