உள்ளூர் செய்திகள்
.

சிங்காரபேட்டை அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-05-13 13:14 IST   |   Update On 2022-05-13 13:14:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி  மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டி, சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சின்னசேட்டு இவரது மனைவி தீபா (வயது 22 ).

இந்த தம்பதியினருக்கு திருமணமாக இரண்டாடுகள் ஆனநிலையில் குழந்தைகள் இல்லை, இதனையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. 

மீண்டும் நேற்று  கடந்த 12- ந் தேதி மாலை கணவனுடன் கோபித்து கொண்டு  வீட்டை விட்டு சென்ற தீபா வீடு திரும்பவில்லை .இது குறித்து தீபாவின் கணவர் சிங்காரப்பேட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Similar News