உள்ளூர் செய்திகள்
.

நிலத்தகராறில் மோதல்: கூலித்தொழிலாளி கைது

Published On 2022-05-13 12:49 IST   |   Update On 2022-05-13 12:49:00 IST
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ராமாபுரம் அடுத்த ஜக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 39).  கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). 

கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில் கடந்த, 6-ந் தேதி ஏற்பட்ட தகராறில் கண்ணன், சந்திரபிரகாஷை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.

இது குறித்து சந்திரபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்தனர்.

Similar News