உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் ராம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவி மர்சையாக நடை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.
தற்போது கொரோனா அச்சம் நீங்கியுள்ள நிலையில், இந்தாண்டு மாரியம்மன் கோவில் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி ஏராளமான ஆண், பெண் பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழா நாளான நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன், மாவிளக்கு எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
மேலும். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கன்னம், முதுகில் அலகு குத்திக்கொண்டும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறும், ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்களின் பூ கரக ஊர்வலமும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பக்தர்கள், ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள தேசம்மா கோவில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகேயுள்ள கங்கம்மா கோவில், மண் மாரியம்மா, ஏடுகிரியம்மா ஆகிய சாமி கோவில்களுக்கும் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மாரியம்மன் கோவில் விழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் மேற்பார்வையில் நகர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.