உள்ளூர் செய்திகள்
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

சூளகிரி பகுதியில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்

Published On 2022-05-10 16:09 IST   |   Update On 2022-05-10 16:09:00 IST
சூளகிரி பகுதியில்அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

இதில் அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் தினேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சரவணன்,ஜெகதாம்பிகா, நடராஜன், சப்தமோகன், கணகவல்லி மற்றும் நிர்வாசிகள் 50 மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கை முன்வைத்து சூளகிரிஅரசு வட்டார மருத்துவமனை, வட்டார கல்வி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம், முன்பும் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

Similar News