உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரையில் காணம்பட்டி பகுதியில் சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்

Published On 2022-05-10 15:43 IST   |   Update On 2022-05-10 15:43:00 IST
ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்தது. இதனால்விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த  கான ம்பட்டி  கிராம பகுதியில் விவசாயி செல்வம். இவரது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் வாழை பயிர் செய்திருந்தார்.

 நேற்று வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 300 -க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை தார்கள் சூறைக்காற்றில் முற்றிலும் உடைந்து சேதமடைந்து போனது. 

இதனால் விவசாயிக்கு சுமார் ஒரு லட்சம் நட்டம் ஏற்பட்டதாக வேதனையுடன் கூறுகிறார். இதேபோல இப்பகுதியில் வாழை பயிர்கள் காற்றினால் உடைந்து விழுந்து உள்ளது.
 எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு உரிய முறையில் நிவாரணம் வழங்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக விவசாயம் செய்ய ஏதுவாய் இருக்கும் என கூறினார் .

இது போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News