உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே கேழ்வரகு தரம் பிரிக்கும் போது எந்திரத்தில் பெண்ணின் தலை சிக்கியது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கேழ்வரகு தரம் பிரிக்கும் போது எந்திரத்தில் பெண்ணின் தலை சிக்கியது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ஜி.டி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சியம்மாள் (வயது50). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேள்விறகு பயிரிட்டுள்ளார். அது தற்போது அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அறுவடை செய்த கேள்விறகை எந்திரம் மூலம் தரம் பிரிக்கும் பணி நடந்தது. அப்போது எந்திரத்தில் எதிர்பாராவிதமாக அம்சியம்மாள் தலைமுடி சிக்கியது.
இதனை சுதாரித்து கொண்ட டிரைவர் எந்திரத்தை உடனே நிறுத்தினார். இதில் அவர் தலையின் டாப் பகுதி தனியாக பிரிந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.