உள்ளூர் செய்திகள்
3 வயது ஆண் மானை வேட்டையாடிய 4 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே 3 வயது ஆண் மானை வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மவாட்டம் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில், வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் முருகன், அங்குரதன், வன காவலர் பூபதி உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பிரிவுக்கு உடபட்ட கணபதிபட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 4 பேர் கையில் பெரிய மூட்டையுடன் வந்தனர். வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர். அந்த மூட்டையில் 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மொரப்பூர் அடுத்த கணபதிப்பட்டியை சேர்ந்த ராஜி(65), முருகன்(36), மாதையன்(58), சேலம் அழகாபுரம் அருகே உள்ள நகரமலை அடிவாரத்தைச் சேர்ந்த செல்லப்பன்(34) என்று தெரியவந்தது.
மேலும், அவர்கள் கணபதிப்பட்டி பகுதியில் மானை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தலையை தனியாக துண்டித்து விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த போது வனத்துறையினரிடம் பிடிபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொல்லப்பட்ட மானின் உடல் மற்றும் உரிமம் பெறாத ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.