உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் முறிந்து விழுந்த மரம்.

லாரி மோதி நடுரோட்டில் விழுந்த மரம்

Published On 2022-05-09 10:55 IST   |   Update On 2022-05-09 10:55:00 IST
கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் நடுரோட்டில் மரம் முறிந்து விழுந்தது.
புதுச்சேரி: 

கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு பெங்களூரில் இருந்து புதுைவ நோக்கி வந்த  சரக்கு  லாரி புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது  அதிேவகமாக மோதியது.

இதில் மரம் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். சாலையில் விழுந்த மரத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டில் முறிந்து விழுந்த மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர். 

Similar News