உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் குழந்தை பலி தாய் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் குழந்தை பலியானது. தாய் படுகாயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பெருங்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது30).இவரது மனைவி கோமதி (26). இவர்களுக்கு சிவசக்தி என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை இருந்தது.
இவர்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பெல்லூர் பகுதிகளில் தங்கியிருந்து திம்மப்பா என்பவரது செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர்.நேற்று மதியம் தாயின் பின்னால் ஓடிய குழந்தை அப்பகுதியில் தவறி விழுந்தது. அந்த இடத்தில் ஈரமாக இருந்த எர்த் கம்பி மீது குழந்தை கையை வைத்தது.
அப்போது குழந்தை மீது மின்சாரம் தாக்கவே அதை கவனித்த கோமதி குழந்தையை காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை சிவசக்தி உயிரிழந்தாள். அவரது தாய் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.