உள்ளூர் செய்திகள்
.

சிங்காரபேட்டையில் தொழிலாளியை தாக்கியவர் கைது

Published On 2022-05-08 13:45 IST   |   Update On 2022-05-08 13:45:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது42). இவர் நேற்று ஏரியில் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு லோகநாதன் என்பவர் நிலத்தில் வழியாக வந்ததாக தெரிகிறது.

 இதனை லோகநாதன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் அவர் சிவராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து சிவராஜ் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

Similar News