உள்ளூர் செய்திகள்
4 வழி சாலை விரிவாக்க பணிக்காக மடுகரை-கடலூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சென்னை- நாகப்பட்டி–னம் சாலை விரிவாக்கப் பணி தற்போது புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வருகின்றது.
அதனைத்தொடர்ந்து மதகடிப்பட்டு இருந்து கடலூர் செல்லும் முக்கிய சாலை தற்போது துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
புதுவையில் இருந்து நெட்டப்பாக்கம் வழியாக மடுகரை கடலூர் செல்லும் வாகனங்கள், திருக்கனூரில் இருந்து வரும் வாகனங்கள், விழுப்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள், 4 முனை முக்கிய சந்திப்பாக மதகடிப்பட்டில் இருந்து பிரிந்து செல்லும் வாகனங்கள் தற்போது மதகடிப்பட்டு பகுதியில் உள்ள சந்தை தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டு உள்ளன.
இதனால் மதகடிப்பட்டு பகுதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலையின் இருபுறமும் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நிலையில் இப்பகுதியில் மீண்டும் வாகனங்கள் இயங்குவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று தெரிய வருகின்றது.
மதகடிப்பட்டில் 4 முனை சந்திப்பில் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக கடலூர்- மடுகரை சாலை துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.