உள்ளூர் செய்திகள்
.

சிங்காரபேட்டையில் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 4 மாணவர்கள்

Published On 2022-05-06 09:18 GMT   |   Update On 2022-05-06 09:18 GMT
சிங்காரபேட்டை அரசு பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கழிவறைக்கு தூக்கி சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள கேத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன். இவன் சிங்காரபேட்டை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து  வந்தான். 

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பாலிடெக்னிக்கல்லூரி மாணவன், 10-ம் வகுப்பு மாணவன், 11-ம் வகுப்பு  மாணவன் உள்பட 4 பேர் கடந்த மாதம் 14-ந்தேதி அன்று சிங்காரபேட்டை பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த 12 சிறுவனை பள்ளி கழிவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். பின்னர் அங்கு 11-ம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேரும் சேர்ந்து அந்த சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுவன் சத்தம் போட்டான். ஆனால் அவர்கள் நீ சத்தம் போட்டு ஊரை கூட்டினால்  உயிர் வாழ முடியாது. நாங்கள் செல்வதை கேள் என்றார். இதனால் பயந்து போன சிறுவன் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் கேட்டு அடி பணிந்து நின்றான். 

மேலும் இந்த சம்பவத்தை நீ யாரிடம் சொல்ல கூடாது. அதனையும் மீறி நீ யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து அந்த சிறுவனை தப்பி வீட்டிற்கு சென்று விட்டான்.

நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரியிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அலுவலர் கஸ்தூரி நேற்று சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News