உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கட்டிலில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு

Published On 2022-05-04 13:02 IST   |   Update On 2022-05-04 13:02:00 IST
அண்ணாநகரில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி இறந்தார்
புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி பிரகன்நாயகி.  இவரது தாய் ஆண்டாள் (வயது78) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஆண்டாளுக்கு உடல் நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி இரவு திடீரென ஆண்டாள் கட்டிலில் இருந்து தடுமாறி  கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையறிந்த அவரது மகள் பிரகன்நாயகி ஆண்டாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டாள் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பிரகன்நாயகி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News