உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள அரசம்பட்டி பகுதியில் பொதுமக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று நடைபெற்ற மே தின கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்த்திடம் பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
முகாமில் 2 வாரங்களாக குடிநீர் சரிவரை வராததால் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டபோது பொதுமக்ளிடம் சரி வரை பதில் அளிக்காத ஊராட்சி மன்றத் தலைவர் சிவலிங்கத்தை கண்டித்தும், கிராமசபை கூட்டத்தை புறகணித்தும் பொதுக்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வர ஏற்பாடு செய்து கொடுக்க உறுதியளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.