உள்ளூர் செய்திகள்
சீறிபாய்ந்த காளைகளை அடக்கும் காளையர்கள்.

எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற காளையர்கள்

Published On 2022-05-02 13:43 IST   |   Update On 2022-05-02 13:43:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் எருதுவிடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் அடுத்துள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.

 இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகளை அணியணியாக அவிழ்ந்து விடப்பட்டன. சீறி ப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுப்பொருட்களை மற்றும் அலங்கார தட்டிகளையும் பறித்துச் சென்றனர். அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு மாடுகளை  பிடித்து அடக்கினர்.

விழாவை காண தேன்கனிக்கோட்டை , கெலமங்கலம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளில் கண்டு ஆரவாரம் செய்து ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News