உள்ளூர் செய்திகள்
தி.மு.க. சார்பில் 30 இடங்களில் மே தின விழா
தொ.மு.ச. சார்பில் 30 இடங்களில் மே தின விழா சிவா எம்.எல்.ஏ. கொடியேற்றி நலதிட்ட உதவி வழங்கினார்.
புதுச்சேரி:புதுவை தொ.மு.ச சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.
புதுவை ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த மே தின விழாவில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொ.மு.ச. கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதேபோல் உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை, புதுவை அரசு போக்குவரத்து கழக பணிமனை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொ.மு.ச. கொடியேற்றப்பட்டு, தொழிலாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், குணா திலீபன், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், வடிவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளர் காந்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் காயாரோகனம், சிவக்குமார்,, மிஷேல், பூமிநாதன், கண்ணன், அய்யனார், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி,, ராஜாராம், தட்சிணாமூர்த்தி, துரை பக்தவச்சலம், ராஜேந்திரன், திருக்குமரன், காசி வீரப்பன், சூர்யா, கலியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.