உள்ளூர் செய்திகள்
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு நினைவு பரிசு வழங்கிய காட்சி.

பள்ளி ஆண்டு விழா

Published On 2022-05-01 10:33 IST   |   Update On 2022-05-01 10:33:00 IST
ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி (எலைட்) வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர்.கிறிஸ்டிராஜ், பள்ளியின் முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் தலைமைத் தாங்கினர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. விழாவில் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளையும் பள்ளி நிர்வாகம் பற்றியும் பாராட்டிப் பேசினார். 

இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியச் சங்கத் தலைவர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், ரஞ்சனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவின் முடிவில் பள்ளியின் துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் நன்றியுரை வழங்கினார்.

Similar News