உள்ளூர் செய்திகள்
சாய்பாபா ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்
கோரிமேடு அருகே பட்டானூரில் வழிகாட்டும் சாய்பாபா ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
புதுச்சேரி:
கோரிமேடு அருகே பட்டானூரில் வழிகாட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சாய்பாபாவுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.
அதுபோல் நேற்று அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பக்கதர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.