உள்ளூர் செய்திகள்
டிப்பர் லாரிகள் மோதல் -போக்குவரத்து பாதிப்பு
தவளக்குப்பத்தில் விபத்து டிப்பர் லாரிகள் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
திண்டிவனத்தில் இருந்து புதுவை வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தவளகுப்பம் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, அபிஷேகப்பாக்கம் சாலை வழியாக வந்த ஜல்லி ஏற்றி வந்த லாரி பின் பக்கமாக மோதியது.
இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து ஜல்லி ரோடு முழுவதும் கொட்டியது.
அதிகாலை நேரம் போக்குவரத்து குறைவாக இருந்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில், சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி டிரைவர் கிளியனுார் கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்த வெற்றிமுருகன் (36) லேசானக காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாரும், தவளக்குப்பம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரதச்தை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது